close
Choose your channels

டிவி பார்த்ததால், தாய் அடித்து குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திருப்பம்: கள்ளக்காதலால் கொலையா?

Wednesday, May 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிவி பார்த்ததால், தாய் அடித்ததில் 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தையின் தாயும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து குழந்தையை அடித்தே கொலை செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேனி அருகே போடிநாயக்கனுர் பகுதியை சேர்ந்த நித்யகமலா என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் பிரசன்னா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் நித்யகமலாவை பார்க்க அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். முதலில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த உறவு, நித்யகமலாவுடன் கள்ளக்காதல் ஏற்படும் அளவுக்கு விரிந்துள்ளது. இதனையறிந்த பிரச்சனா, நித்யகமலாவையும் அவரது குழந்தையையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட கள்ளக்காதலன், நித்யகமலாவை திருச்சி அருகே உள்ள கொட்டியம் என்ற பகுதிக்கு அழைத்து சென்று மனைவி போல் குடும்பம் நடத்தினார். ஆனால் நித்யகமலாவின் குழந்தை எப்போதும் தாயிடம் ஒட்டிக்கொண்டு இருந்ததால் கள்ளக்காதல் உறவுக்கு இடைஞ்சலாக குழந்தை இருப்பதை அறிந்து குழந்தையை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார் கள்ளக்காதலன். இதனை தடுக்க வேண்டிய நித்யகமலாவும் குழந்தையை தாக்கியுள்ளார். இதனையடுத்து குழந்தை படுகாயம் அடைந்ததால் மருத்துவமனை சேர்த்தனர். குழந்தை படிக்காமல் டிவி பார்த்ததால் ஆத்திரத்தில் அடித்ததாக போலீஸ் விசாரணையில் நித்யகமலா கூறினார். ஆனால் சந்தேகம் அடைந்த போலீசார் நித்யகமலாவையும் அவருடைய கள்ளக்காதலனையும் தங்கள் பாணியில் விசாரணை செய்த போது இருவரும் சேர்ந்து குழந்தையை அடித்தே கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கொலை வழக்கில் கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பிஞ்சு குழந்தையை இரக்கமின்றி தாயே அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.