close
Choose your channels

சென்னையில் மட்டுமே 500க்கும் மேல்: கொரோனாவின் கோரத்தாண்டவம்

Sunday, May 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்து வரும் நிலையில் இன்று சென்னையில் மட்டுமே கொரோனாவுக்கு 500க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்ததாக சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்றுமுன் வெளியான தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று மட்டும் 669 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 7024ஆக உயர்ந்துள்ளதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 669 பேர்களில் சென்னையில் மட்டும் 509 பேர்கள் என்றும் இதனை அடுத்து சென்னையில் கொரோனாவால் வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3839 ஆக உயர்ந்துள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையை அடுத்து திருவள்ளூரில் 47 பேர்களும், செங்கல்பட்டில் 43 பேர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 13,367 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 2,43,037 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 135 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனாவில் இருந்து தமிழகத்தில் மொத்தம் 1959 பேர் குணமாகியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 3 பேர் பலியாகி இருப்பதாகவும் இதனை அடுத்து தமிழகத்தில் மொத்த பலி 47 ஆக அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos