close
Choose your channels

குறைந்தது கொரோனா பாதிப்பு: தமிழகம், சென்னையில் இன்று எத்தனை பேர்?

Wednesday, May 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த நான்கு நாட்களாக 700க்கும் மேற்பட்டோர்கள் குறிப்பாக சென்னையில் 500க்கும் மேற்பட்டோர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சற்று கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9227ஆக உயர்ந்துள்ளது

இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 509 பேர்களில் 380 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும் இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5262ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 25 பேர்களும், திருவண்ணாமலையில் 23 பேர்களும், கடலூரில் 17 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று கொரோனாவில் இருந்து 42 பேர்கள் குணமாகியுள்ளதால் தமிழகத்தில் மொத்தம் 2176 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள்னர். அதேபோல் இன்று தமிழகத்தில் 12,780 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் 279,467 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று தமிழகத்தில் கொரோனாவால் 3 பேர் பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.