close
Choose your channels

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேர்களுக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

Monday, May 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வெளிவந்துள்ள தகவல் அதிர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3550 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் இதுவரை 31 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 30 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதால் கொரோனாவில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 1409ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று 12,863 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், தமிழகத்தில் மொத்தம் 153,489 பேர்களுக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 527 பேர்களில் 308 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் கோயம்பேடு மார்க்கெட் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக 100, 200 என்றே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ளதால் அரசும் மக்களும் சுதாரிக்க வேண்டிய நேரமிது என்றே கருதப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.