close
Choose your channels

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்வு: அமைச்சர் தகவல்

Saturday, March 21, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பல நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தியிருந்த நிலையில் தற்போது மேலும் 3 பேர்களை கொரோனா தாக்கியுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தற்போது தமிழகத்தில் கொரோனா பார்த்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கொரோனா தாக்கியவர்களில் இரண்டு பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் நியூசிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் 6 பேர்களும் வெளியிடங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்கள் என்றும் சமூக நோய் தொற்றாக தமிழகத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

மேலும் கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டுள்ள ஆறு பேர்களும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த ஆறு பேரில் ஐந்து பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதும் ஒருவர் டெல்லியில் இருந்து வந்தவர் என்பதும் குறிப்பிட்டுள்ளார்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.