கொரோனாவுக்கு பலியான முதல் குழந்தை: ஆறு வார குழந்தை இறந்ததால் நாடே சோகம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளையும் ஆட்டிப்படைத்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவை விட தற்போது அமெரிக்காவில் அதிக அளவு பாதிக்கப்பட்டவர்களும், உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது

அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் கொரோனா வைரசுக்கு முதல்முதலாக ஆறு வார குழந்தை ஒன்று பலியாகியுள்ளது அந்நாட்டினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த குழந்தை அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவிய அந்த் குழந்தை சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்தது. இதனையடுத்து கொரோனா வைரஸால் உலகிலேயே மிக இளவயது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அமெரிக்காவையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது.