close
Choose your channels

6 வயது சிறுவன் படுகொலை: சகோதரியின் அதிர்ச்சி வாக்குமூலம்

Saturday, August 1, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தில் 6 வயது சிறுவன், மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவத்தில் சிறுவனின் சகோதரி கூறிய திடுக்கிடும் வாக்குமூலத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எத்ஜாகிர் என்ற கிராமத்தில் 6 வயது சிறுவன் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய பெற்றோர் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, சகோதரன், மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் அடைந்துவிட்டதாக சிறுவனின் சகோதரி அழுது கொண்டே தனது பெற்றோரிடம் கூறினார்.

இதனையடுத்து சோகத்துடன் அந்த சிறுவனுக்கு பெற்றோர்கள் இறுதிச்சடங்கு செய்தனர். இரண்டு நாட்கள் கழித்து மறைந்த சிறுவனின் சகோதரி தனது பெற்றோரிடம் மன உறுத்தல் காரணமாக உண்மையை கூறியுள்ளார். தான் ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், தனது காதலன் வீட்டுக்கு வந்ததை சகோதரன் பார்த்துவிட்டதால் தனது காதலன் அவனை கொலை செய்துவிட்டதாகவும், காதலனை காப்பாற்றுவதற்காக மாடியில் இருந்து சகோதரன் விழுந்துவிட்டதாக கூறியதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து மறைந்த சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாகவுள்ள வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மறைந்த சிறுவனின் சகோதரியும் கைது செய்யப்பட்ட நிலையில், புதைக்கப்பட்ட சிறுவனின் பிணத்தை தோண்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.