close
Choose your channels

6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!!! 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்!!!

Monday, August 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

6 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!!! 6 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தும் போலீஸ்!!!

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் விளையாட்டிக் கொண்டிருந்த 6 வயது குழந்தையை மோட்டார் சைக்கிளில் சென்ற மர்ம நபர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஹபூர் மாவட்டத்திலுள்ள கர் முக்தேஸ்வர் பகுதியில் வீட்டின் ஓரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கடத்திச் சென்றதாக அக்குழந்தையின் பெற்றோர் காவல் துறையில் புகார் கூறியுள்ளனர். பிள்ளையைக் காணாமல் தேடிய பெற்றோர் மற்றும் போலீஸார் அக்குழந்தையை அப்பகுதியில் உள்ள ஒரு புதரில் ரத்தக்கறை தோய்ந்த ஆடையோடு மீட்டு மருத்துவமனையில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தைக்குப் பாலியல் நடந்ததாகக் கூறிதோடு அக்குழந்தைக்கு அறுவை சிகிச்சையை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் தீவிர வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 6 தனிப்படைகள் அமைப்பட்டு உள்ளதாகவும் சிறுமி மற்றும் பெற்றோர் கூறிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளியின் வரைபடத்தை உருவாக்கியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.