வாழ்க்கையைத் தலைகீழாக மாற்றியக் கனவு? லாட்டரில் 637 கோடி பரிசு!

  • IndiaGlitz, [Thursday,January 28 2021]

கனடாவில் உள்ள ஒரு ஏழை தம்பதிகளுக்கு லாட்டரியில் 60 மில்லியன் டாலர் ஜாக்பாட் அடித்து இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு கிட்டத்தட்ட ரூ.637 கோடி. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் கொண்ட ஒரு பெண்மணி கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய கணவனின் கனவில் வந்த ஒரு எண்ணையே தொடர்ந்து வாங்கி வந்து இருக்கிறார். இந்த எண் எப்படியும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்துவிடும் என்று நம்பிய அந்தப் பெண்மணிக்கு தற்போது மெகா பரிசுத் தொகை விழுந்து இருக்கிறது.

டெம் பிரவடவுடம் எனும் 57 வயது பெண்மணி தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கத்தைக் கொண்டு இருக்கிறார். காரணம் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் இவருடைய கணவரின் கனவில் ஒரு எண் வந்ததாம். அந்த எண்ணை அதிர்ஷ்டமாக நம்பிய இவர் தற்போது பல கோடிகளுக்கு அதிபதியாகி இருக்கிறார். 2 குழந்தைகளைக் கொண்ட இவர் கொரோனா நேரத்தில் வேலையையும் இழந்து இருக்கிறார். ஒருநாள் தன்னுடைய அனைத்து பில்களையும் கட்டுவதற்காக வங்கிக்கு சென்ற இவருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது.

காரணம் வீட்டில் இருந்த டெம்மின் கணவர் வெட்டியாக இருந்த சமயத்தில் லாட்டரி சீட்டுகளை எல்லாம் எடுத்து அதை சரிப்பார்த்து இருக்கிறார். அப்படி பார்த்த ஒரு சீட்டுக்கு 60 மில்லியன் டாலர் பரிசுத் தொகை விழுந்து இருக்கிறது. இதை உடனே தன்னுடைய மனைவிக்கு தெரிவித்து இருக்கிறார். கடந்த 40 வருடங்களாக பொதுச் சுகாதார ஊழியர்களாக பணியாற்றி வரும் இந்தத் தம்பதி வாழ்க்கையில் ஒரு பெரிய நிம்மதியையே அடைந்து விட்டனர்.

இந்தச் சம்பவத்தை அடுத்து கனவில் வரும் விஷயங்கள் எல்லாம் உண்மையில் நடந்து விடுமா என்ற கேள்வி எழலாம். உண்மையில் ஆழ்மனம் என்ன விரும்புகிறதோ அதைத்தான் கனவுகள் பிரதிபலிக்கின்றன என்று சைக்கலாஜி நிபுணர்கள் கூறுகின்றனர். கனவில் என்றைக்காவது ஒரு அதிர்ஷ்டம் அடித்து விடதா? வாழ்க்கையில் நிம்மதி அடைந்து விடமாட்டோமா என விரும்பிய டெம்மின் கணவர் வாழ்க்கை தற்போது பூர்த்தியாகி விட்டது என்றே சொல்ல வேண்டும்.

More News

சூர்யா-கார்த்தியின் செல்ல சண்டைகள்: பிருந்தாவின் பிரத்யேக பேட்டி!

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களான சூர்யா, கார்த்தி குறித்து அவர்களது சகோதரி பிருந்தா சிவகுமார் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியுள்ளார்

சரத்குமார், ராதிகாவின் அடுத்தடுத்த அரசியல் அதிரடி அறிவிப்புகள்!

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ராதிகா இருவரும் அடுத்தடுத்து அரசியல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் துருவ் விக்ரம்: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பா. ரஞ்சித் தற்போது ஆர்யா நடித்து வரும் 'சல்பேட்டா' என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

'சூர்யா 40' படத்தின் நாயகியான சிவகார்த்திகேயன் பட நடிகை: அதிகாரபூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி அந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரருக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ஒருவருக்கு திருமணம் நடந்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பதும் திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது