close
Choose your channels

கொரோனா தாக்கி இருக்குமா என்ற பயத்தில் தற்கொலை செய்த பெண்: பரபரப்பு தகவல்

Monday, April 6, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிக வேகமாக பரவி வரும் நிலையில் பஞ்சாபை சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் தனக்கு தொண்டை வலி இருந்ததால் கொரோனா வைரஸ் தன்னையும் தாக்கி இருக்கும் என அஞ்சி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப்பை சேர்ந்த ராம்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் கவுர். 60 வயதான இவருக்கு தொண்டையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் அடிக்கடி இருமல் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து அவருடைய வீட்டில் உள்ளவர்கள் சந்தோஷ் கவுருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருக்க வாய்ப்பு இருப்பதாக கருதி அவரை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.

மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும் இது சாதாரண தொண்டை வலி தான் என்றும் கூறி அதற்கு ஏற்ற மருந்து மாத்திரைகளை கொடுத்துள்ளார். இருப்பினும் அவரது உறவினர்கள் சிலர் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக தொடர்ந்து கூறி வந்ததை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சந்தோஷ் கவுர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos