close
Choose your channels

மூன்று முறை திருமணமான 62 வயது பெண்ணுடன் 26 வயது இளைஞர் காதல்!

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மூன்று முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் பேரக் குழந்தைகள் இருக்கும் 62 வயது மூதாட்டி ஒருவரை 26 வயது இளைஞர் ஒருவர் காதல் திருமணம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் 62 வயதான பெண் இசபெல். இவருக்கு ஏற்கனவே 3 முறை திருமணமாகி மகன்கள், மகள்கள் மற்றும் பேரக் குழந்தைகள் உள்ளனர். மூன்று கணவர்களும் இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு பேஸ்புக்கில் இவர் ஒரு துனிசியா நாட்டு இளைஞருடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இதனையடுத்து அந்த இளைஞர் தனது காதலை இசபெல்லாவிடம் தெரிவித்தார். முதலில் யோசித்த இசபெல்லா அதன் பிறகு அந்த இளைஞரின் காதலை ஏற்றுக் கொண்டார். இதன்பின் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த ஜனவரி மாதம் இந்த திருமணம் நடந்தது

இருப்பினும் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இருவரும் அவரவர் நாட்டில் பிரிந்து இருப்பதாகவும் மிக விரைவில் தனது மனைவியை சந்திக்க தான் இங்கிலாந்துக்கு செல்லவிருப்பதாகவும் அந்த இளைஞர் கூறியுள்ளார். இந்த திருமணம் குறித்து அந்த இளைஞர் மேலும் கூறியபோது ’இசபெல்லாவை தான் வயதான பெண்ணாக பார்க்கவில்லை என்றும் அவருடைய நல்ல குணத்தை பார்த்ததாகவும் தெரிவித்தார். மேலும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறியதோடு, எங்களை இப்போதைக்கு கொரோனா பிரிந்தாலும் என் மனைவிக்காக நான் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார்

இந்த வித்தியாசமான திருமணம் குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.