close
Choose your channels

தமிழகத்தில் கொரோனா வைரஸ்: நேற்றைவிட இன்று அதிகமானதால் பரபரப்பு

Tuesday, April 7, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துரை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் இன்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் மேலும் பலியாகியுள்ளதை அடுத்து பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்ற 64 வயது பெண் இன்று உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தொற்றில் இருந்து 19 பேர் குணமடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். 

மேலும் இன்றைய தினம் வரை வீட்டுக்கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 66,431 என்றும் கொரோனா வார்டில் 253 பேர் இருப்பதாகவும், இவரக்ளில் 28 நாட்கள் நிறைவடைந்தவர்கள் 27,416 என்றும் இதுவரை தமிழகத்தில் 5305 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos