close
Choose your channels

ஊரடங்கு முடியும் நிலையிலும் குறையாத கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு நிலவரம்

Tuesday, July 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தினமும் சுமார் 7000ஆக இருந்து வரும் நிலையில் இன்றும் கொரோனா பாதிப்பு 7000க்கு அருகில் உள்ளது. ஆறாம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி தமிழ்நாட்டில் இன்று 6972 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் சென்னையில் மட்டும் இன்று 1107 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,27,688 என்பதும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,438 என்பதும் குறிப்ப்பிடத்தக்கது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்றுமட்டும் 5,739 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இன்று தமிழ்நாட்டில் ஒரே நாளில் 88 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3659 என்பதும குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4707 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,956 ஆகும். மேலும் இன்று ஒரே நாளில் 59,584 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.