close
Choose your channels

மானநஷ்ட வழக்கு தொடர்வேன்: புகார் கூறிய தயாரிப்பாளருக்கு தமிழ் ஹீரோ எச்சரிக்கை!

Friday, March 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன் மீது பணமோசடி புகார் அளித்த தயாரிப்பாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்வேன் என தமிழ் ஹீரோ ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ் திரைப்பட ஹீரோக்களில் ஒருவர் விமல். ’பசங்க’ ’களவாணி’ ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ உள்பட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவருடைய மனைவி சமீபத்தில் திமுகவில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு என்பவர் திடீரென விமல் மீது 50 லட்சம் ரூபாய் மோசடி புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து நடிகர் விமல் விளக்கமளித்துள்ளார்.

என் மீது மோசடி புகார் குறித்த செய்திகள் ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வந்து இருப்பதை பார்த்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். என் வளர்ச்சியை பிடிக்காத சிலர் திருநாவுக்கரசை ஏவி, இதுபோன்று புகார் செய்துள்ளனர். திருநாவுக்கரசுவுக்கும் எனக்கும் எந்தவிதமான நேரடி பண பரிமாற்றம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இது தொடர்பாக அவர் மீது மான நஷ்ட வழக்கும் தொடர இருக்கிறேன்’ என்று அவர் கூறியுள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.