close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 74 ஆனது

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வரும் நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 இலிருந்து 74 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

திருவனந்தபுரத்தில் இருந்து தமிழகம் திரும்பிய 43 வயது நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அதேபோல் திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் டெல்லியில் இருந்து விழுப்புரம் திரும்பிய 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

மேலும் டெல்லியில் இருந்து மதுரை திரும்பிய இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் 2 பேரும் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.