close
Choose your channels

மருமகளுக்கு கொரோனா தொற்று, மாமியார் பலியான பரிதாபம்: தூத்துகுடியில் பரபரப்பு

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தூத்துக்குடியில் லேப் டெக்னீசியன் பணி செய்யும் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தில் உள்ள கணவர், மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவி, இதில் மாமியார் சிகிச்சை பலனின்றி பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு பெண் லேப் டெக்னீஷியனாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அவருக்கு திடீரென கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனை அவர் அறியாமல் இருந்ததால் அவரது கணவருக்கும் மாமியாருக்கும் கொரோனா தொற்று பரவியது.

இதனையடுத்து மூவரும் தூத்துகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பயனின்றி லேப் டெக்னீசியன் பெண்ணின் மாமியார் உயிரிழந்தார். அவருக்கு 77 வயது என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் தூத்துகுடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos