close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 74 பேர்களுக்கு கொரோனா: சுகாதார செயலாளர்

Saturday, April 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் ஏற்கனவே 411 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று ஒரே நாளில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 485 பேர்களில் 422 பேர் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகத்திற்கு திரும்பியவர்கள் என்றும் 63 பேர் மட்டுமே பிறர் என்றும் சுகாதார செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதால் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.