close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 75 பேர்களுக்கு கொரோனா: இந்தியாவில் 2வது இடத்தை பிடித்ததால் பரபரப்பு

Thursday, April 2, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டெல்லியில் மத மாநாட்டில் கலந்துகொண்டு தமிழகம் திரும்பியவர்களுக்கு கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதிப்பு ஏற்பட்டு கொண்டிருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இன்று மேலும் 75 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்கள் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சற்றுமுன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிவர்களுக்கு மட்டும் இதுவரை 264 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று மட்டும் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது என்பதும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு தமிழ்நாடு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள் பலரின் பரிசோதனை முடிவு இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாநாட்டிற்கு தமிழகத்தில் இருந்து மொத்தம் 1103 பேர் கலந்து கொண்டுள்ளனர் என்பது ஏற்கனவே அறிந்ததே.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos