close
Choose your channels

பிவி சிந்துவை காதலிக்கும் 75 வயது முதியவர்: கலெக்டரிடம் மனு!

Tuesday, September 17, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து வைக்கக் கோரியும் 75 வயது முதியவர் ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து சமீபத்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்று இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். அவருக்கு பிரதமர், ஜனாதிபதி உள்பட நாடே பாராட்டுக்களும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றது.

இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள விரதக்குளம் என்ற பகுதியைச் சேர்ந்த 75 வயது விவசாயியான மலைச்சாமி என்பவர், பி.வி.சிந்துவின் புகைப்படம் ஒட்டப்பட்டிருந்த மனுவை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவிடம் அளித்துள்ளார். அந்த மனுவில், விளையாட்டுத்துறையில் தீராத ஆர்வம் கொண்ட தான், பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்துவை காதலித்து வருவதாகவும், எனவே பி.வி.சிந்துவை திருமணம் செய்தே தீருவேன் என்றும் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது மனுவில் தனக்கு 16 வயது மட்டுமே ஆவதாகவும், தீமைகளை அழிக்க அவதாரம் எடுத்து வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனுவால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.