close
Choose your channels

தமிழகத்தில் இன்று 77 பேர்களுக்கு கொரோனா தொற்று: தலைமைச்செயலாளர் தகவல்

Friday, April 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கொரோனா வைரஸால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை தினமும் சுகாதாரத்துறை அளித்து வரும் நிலையில் சற்றுமுன் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவலை தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 77 என்றும், இந்த 77 பேர்களும் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என்பதால் வெளியில் இருந்து யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 72 பேர்கள் 5 பேர்களால் பரவியுள்ளது என்றும் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்ததை முதல்வர் பரிசீலனைசெய்து வருவதாகவும் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.