செப்டம்பரில்தான் ரிஓபன்… ஒரே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த 770 பேருக்கு கொரோனா!!!

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

கொரோனா ஊரடங்கிற்குப் பின்பு செப்டம்பர் மாத நடுவில் இங்கிலாந்தின் பல பல்கலைக் கழகங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில் அங்குள்ள பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் தற்போது கொரோனா தாக்கம் உச்சத்தை தொட்டு இருப்பதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் ஒரே பல்கலைக் கழகத்தைச் சார்ந்த 770 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது குறித்து கடும் பதற்றம் நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது.

இங்கிலாந்தின் நியுகோலஸ் நகரில் உள்ள நார்த்தம்ப்ரியா பல்கலைக் கழத்தில் தற்போது வரை 770 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. மேலும் தங்களைத் தாங்களே தனிமைப் படுத்திக் கொண்ட நூற்றுக் கணக்கான மாணவர்கள் அவர்களுடைய கதவுகளில் Covid+, send beer என எழுதி வைத்திருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் பல்கலைக் கழக நிர்வாகம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உணவு, மற்றும் தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றது.

இதைத்தவிர அங்குள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தில் இதுவரை 124 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் 221 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இந்தப் பல்கலைக் கழகங்கள் எல்லாம் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன என்றும் வெறுமனே சில நாட்களில் அதிக பேருக்கு பாதிப்பை ஏற்பட்டு இருக்கிறது என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

மேலும் நியூகோல்ஸ் நகரில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 1 லட்சம் பேரில் 250 பேருக்கு தொற்று இருப்பதாகவும் அம்மாகாண சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. இதனால் இங்கிலாந்தில் கொரோனா இரண்டாவது அலையை தொடங்கிவிட்டதா எனப் பலரும் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

More News

உணவு கடைகளாக மாறும் பழைய பேருந்துகள்: அரசின் அசத்தல் திட்டம்

15 வருடத்திற்கு மேலான பழைய பேருந்துகளை உணவு கடைகளாக மாற்றும் திட்டம் ஒன்றை கேரள அரசு கொண்டுவந்துள்ளது

மூன்றே மாதத்தில் சிம்புவின் அடுத்த படம் ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்

சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் 'மாநாடு' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு இறுதியில் தான் ரிலீஸாகும்

பிக்பாஸ் தமிழ் எத்தனை நாள்? அதிகாரபூர்வ அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளை பிரமாண்டமாக தொடங்க உள்ளது என்பதும் இந்த நிகழ்ச்சிக்காக லட்சக்கணக்கானோர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் என்பதும் தெரிந்ததே 

2500 கிமீ, 93 நாட்கள்: பாட்டியை சந்திக்க நடந்தே சென்ற 10 வயது பேரன் 

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நேரத்தில் லட்சக்கணக்கானோர் தங்களுடைய சொந்த ஊருக்கு ஆயிரக்கணக்கான கிமீ நடந்தே சென்றனர்.

கள்ளக்காதலனை அடைய கர்ப்பிணியை கொலை செய்த இளம்பெண்: அதிர்ச்சி தகவல்

கள்ள காதலனை அடைய வேண்டும் என்பதற்காக அந்த கள்ளக்காதலனின் மனைவியை கர்ப்பிணி என்றும் பாராமல் கொலை செய்த இளம்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது