close
Choose your channels

கஜா புயல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் பலி

Friday, November 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இன்று அதிகாலை நாகை அருகே கஜா புயல் கரையை கடந்த நிலையில் இந்த புயலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் அதிக சேதம் அடைந்திருப்பதாகவும் சேதம் குறித்து முழுமையாக புயல் கரையை கடந்த பின்னரே கணக்கிடப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கஜா புயலால் இதுவரை எட்டு பேர் பலியாகியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதில் பட்டுக்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 ஆண்கள் பலியாகியிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை அருகே சிவகொல்லையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ரமேஷ், சதீஷ், அய்யாதுரை, தினேஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் கடலூர் அருகே மரக்கிளை முறிந்து விழுந்ததில், மின்வயர் அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி ஆனந்தன் என்பவரும், விருத்தாச்சலம் அருகே கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில் அய்யம்மாள் என்ற பெண்ணும் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பிரியாமணி என்ற சிறுமி உயிரிழந்தார். அதேபோல் அதிராம்பட்டிணத்தில் திராவிட மணி என்ற சிறுமி சுவர் இடிந்ததால் உயிரிழந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.