close
Choose your channels

இந்தியா, இலங்கையை அடுத்து பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் தாக்குதல்: 8 பேர் பலி

Wednesday, May 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவில் புல்வாமாவிலும், இலங்கையில் வழிபாட்டு தலங்களிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது பாகிஸ்தானிலும் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தங்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.

ரம்ஜான் மாதம் என்பதால் உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வரும் நிலையில் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் தாதா தர்பார் மசூதி அருகே இன்று மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றாகிய இந்த மசூதி அருகே குண்டு வெடித்ததால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளத்.

இந்த மசூதியின் பாதுகாப்பிற்கு இருந்த போலீசார்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் ஆனால் இந்த தாக்குதலில் அப்பாவிகள் 8 பேர் பலியானதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருசிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.