close
Choose your channels

8 மாத கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவுக்கு பலி: மதுரையில் அதிர்ச்சி சம்பவம்!

Sunday, May 9, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதையும் நேற்று கூட தமிழகத்தில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ளது தகவலின்படி கொரோனாவுக்கு 8 மாத கர்ப்பிணியாக இருந்த மருத்துவர் ஒருவர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை அனுப்பானடி என்ற பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணி சண்முகப்பிரியா. மருத்துவரான இவர் ஆரம்ப சுகாதார துறையில் பணிபுரிந்து வந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் அவர் வழக்கம்போல் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் மருத்துவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

8 மாத குழந்தையை வயிற்றில் சுமந்தபடி கொரோனா நோயாளிகளுக்கு கடமை தவறாமல் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த சண்முகப்பிரியா அவர்களின் மறைவு அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.