close
Choose your channels

உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

Friday, July 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்திரப்பிரதேசத்தில் ரவுடிகள் அட்டகாசம்: டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் மரணம்!!! பரபரப்பு சம்பவங்கள்!!!

 

உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பிக்ரு என்ற பகுதியில் ரவுடிகள் காவல் துறையினர் மீது நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலால் டிஎஸ்பி உட்பட 8 போலீஸார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே குற்றவழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி ஷகாஷ் துபா பிக்ரு பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து காவல் துறையினர் அங்கு தேடுதல் வேட்டையை நடத்தியிருக்கின்றனர். அப்போது எதிர்பாராத விதமாக ரவுடிகள் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திலேயே டிஎஸ்பி தேவேந்திர மிஷ்ரா உட்பட 8 போலீஸார் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த 2001 ஆம் ஆண்டு உத்திரப்பிரேசத்தில் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்றது. அப்போது பாஜக அமைச்சரவையில் இடம்பெற்ற சந்தோஷ் சுக்லா என்பவரை ரவுடிகள் சுட்டுக் கொன்றனவர். அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஷகாஷ் துபா பதுங்கியருப்பதாக வந்த செய்தியை அடுத்து தற்போது காவல் துறையினர் தேடுதல் வேட்டையை நடத்தினர். அந்த சமயத்தில் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இச்சம்பவத்தில் ரவுடிகள் ஏ.கே. 47 ரக தானியங்கி துப்பாகிகளை பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவான தகவல்கள் எதுவும் வெளியாக வில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் ஏ.கே. 47 ரக துப்பாகிகளின் குண்டுகள் கைப்பற்றப் பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரவுடிகளை நோக்கி காவல் துறையினரும் எதிர் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தானியங்கி துப்பாக்கிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்தக் கோர சம்பவம் நடைபெற்றதாகவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.