தலைமை செயலகத்திலும் புகுந்த கொரோனா: 8 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னையில் ஜெட் வேகத்தில் கொரோனா பாதிப்பு எகிறிக் கொண்டே வருவதால் சென்னை மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சென்னையில் மட்டும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு அலுவலங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத அலுவலர்களுடன் இயங்கி வருகிறது என்பது தெரிந்தது. அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களாக சென்னை தலைமைச் செயலகம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கி வந்தது. தலைமைச் செயலகத்தில் மொத்தம் 6 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் 3000 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்

இந்த நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சென்னை தலைமைச்செயலகத்தில் பணியாற்றும் பணியாளர்களில் 8 பேருக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்றப் பணியாளர்கள் பெரும் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தலைமை செயலகத்தில் 50 சதவீதத்துக்கும் பதிலாக 33% பணியாளர்களுடன் பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என முதல்வருக்கு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

தமிழகம் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வரும் தலைமைச் செயலக ஊழியர்களுக்கே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

13 வயது சிறுமியை நரபலி கொடுத்த தந்தை: அதிர்ச்சி காரணம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அவரது தந்தையே நரபலி கொடுத்திருப்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

முதல்வருக்கு அடுத்த இடத்தை ரஜினிக்கு கொடுத்த மத்திய அமைச்சர்: பெரும் பரபரப்பு

மத்திய அமைச்சர் ஒருவர் தனது ட்வீட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு கொடுத்து இருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரோல்மாடல் இயக்குநர் மணிரத்தினம் பிறந்த தினம் இன்று...

இளைய தலைமுறை இயக்குநர் பலருக்கும் ரோல் மாடலாகவும் மந்திரச் சொல்லாகவும் இருக்கும் இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் பிறந்த தினம் இன்று...

விஷம் குடிப்பதை செல்பி எடுத்து தற்கொலை செய்த நடிகை: பரபரப்பு தகவல்

பெங்களூரை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர் விஷம் குடித்து கொண்டே செல்பி எடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3000ஐ நெருங்கிவிட்ட ராயபுரம், 2000ஐ நெருங்கிய 2 மண்டலங்கள்: சென்னை கொரோனா நிலவரம்!

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் 500,600 என கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக 1000ஐ தாண்டியுள்ளதால்