close
Choose your channels

18 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்

Wednesday, May 27, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய பாதிப்பு குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இன்று அதிகபட்சமாக தமிழகத்தில் 817 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 18545ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 161 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகை தந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 817 பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 558 பேர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12192 ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் இன்று கொரோனா தொற்றால் 6 பேர்கள் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 133ஆக உயர்ந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது மேலும் இன்று கொரோனாவில் இருந்து 567 பேர்கள் குணமாகியுள்ளனர் என்பதும் இதனையடுத்து மொத்த்ஃஅம் 9909 பேர் குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று 10,661 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும், 423,018 பேர்களுக்கு மொத்தம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.