close
Choose your channels

டெல்லியில் இருந்து கோவை திரும்பிய 82 பேருக்கு கொரோனா அறிகுறியா? அதிர்ச்சி தகவல்

Tuesday, March 31, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் டெல்லியில் நடந்த மத நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில் அந்த மாநாட்டிற்குப் பின்னர் தமிழகம் திரும்பிய பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பிய 6 பேருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன்னர் டெல்லியில் இருந்து திரும்பிய 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இந்த நிலையில் டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழகம் திரும்பிய 82 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தெரிய வந்ததை அடுத்து அவர்களுடைய ரத்த மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி தெரிவித்துள்ளார். இவர்களது பரிசோதனை முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா இருக்கின்றதா? இல்லையா? என்பது உறுதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்களால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos