தமிழகத்தில் அதிகரிக்கும் குணமானோர் எண்ணிக்கை: இன்றைய கொரோனா நிலவரம்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த தகவலை சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதன்படி இன்று தமிழகத்தில் 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19372ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 827 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 559 என்பதால் இன்றும் சென்னையில் 500க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 12,762ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 639 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 10,548ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 12 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 145ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இதுவரை 4,55,216 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கூறியுள்ளார்.

More News

அனுஷ்காவை டைவர்ஸ் செய்துவிடுங்கள்: விராத் கோஹ்லிக்கு பாஜக எம்.எல்.ஏ ஆலோசனை

பிரபல பாலிவுட் நடிகையும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா சமீபத்தில் தயாரிப்பாளராக மாறி உள்ளார் என்பது தெரிந்ததே.

கொரோனாவிற்கு பின் திறக்கப்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்ட தமிழ் திரைப்படம்!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது மட்டுமின்றி திரையரங்குகளும் மூடப்பட்டன.

டிக்கிலோனா 2வது லுக்: ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த சந்தானம்

சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படத்தின் புரமோஷன் நேற்று முதல் தொடங்கிய நிலையில் மூன்று நாட்களில் சந்தானத்தின் மூன்று லுக்குகள் வெளியாகும் என சந்தானம்

1500 சினிமா கலைஞர்களின் வங்கிக்கணக்கில் தலா ரூ.3000 டெபாசிட் செய்த ரஜினி பட நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்பு இல்லாமல் இருப்பதால் சினிமா கலைஞர்கள் பலரும் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர்

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன்

விதவைத் தாயுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் அவரது 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் சேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது