close
Choose your channels

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா: மொத்த எண்ணிக்கை 571

Sunday, April 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் சற்றுமுன் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 85 பேர் டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 571 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 4 நாட்களுக்கு முன் வரை கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் வெறும் 17 மட்டுமே இருந்த நிலையில் கடந்த 6 நாட்களில் மட்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

மார்ச் 31ஆம் தேதி 57 பேர்களும், ஏப்ரல் 1ஆம் தேதி 110 பேர்களும், ஏப்ரல் 2ஆம் தேதி 75 பேர்களும், ஏப்ரல் 3ஆம் தேதி 102 பேர்களும் ஏப்ரல் 4ஆம் தேதி 74 பேர்களும் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். இன்று 86 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்ததையும் சேர்த்து மொத்தம் 571 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் கொரோனாவால் தமிழகத்தில் 5 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் அதில் நேற்றும் இன்றும் மட்டும் 4 பேர் பலியாகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos