87 வயது தமிழ் சினிமாவின் மூத்த நடிகை காலமானார். ஒட்டுமொத்த திரையுலகம் இரங்கல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


87 வயதான தமிழ் சினிமாவின் மூத்த நடிகை காலமான நிலையில் ஒட்டுமொத்த திரையுலகமே அவருடைய மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகை புஷ்பலதா காலமானார். இவர் மறைந்த நடிகர் ஏவிஎம் ராஜன் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1955 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர், தமிழில் ’கொங்கு நாட்டு தங்கம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் எம்ஜிஆர், சிவாஜி, ஜெய்சங்கர், எஸ் எஸ் ஆர், முத்துராமன் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 1999 ஆம் ஆண்டு ’பூ வாசம்’ என்ற படத்தில் நடித்தார். பின்னர் அவர் வேறு படங்களில் நடிக்கவில்லை. பரதநாட்டிய கலைஞரான புஷ்பலதா 1964 ஆம் ஆண்டு ஏவிஎம் நடிகர் ஏவிஎம் ராஜனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பதும், இவர்களில் மகாலட்சுமி என்ற மகள் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நடிகை புஷ்பலதா நேற்று மாலை உயிரிழந்தார். இவருக்கு வயது 87. புஷ்பலதாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments