close
Choose your channels

தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையிலும் இன்று அதிகபட்சம்!

Friday, May 29, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்றைய அறிவிப்பில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகபட்சமாக 874 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 135 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20246ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 874 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 618 என்பதும் சென்னையில் முதல்முறையாக 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13362ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11313உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 11,334 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 4,66,550 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.