தமிழகத்தில் 20 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: சென்னையிலும் இன்று அதிகபட்சம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை தினந்தோறும் அறிவித்து வரும் நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் இன்றைய பாதிப்பு குறித்த தகவலை சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்றைய அறிவிப்பில் இதுவரை இல்லாத வகையில் மிக அதிகபட்சமாக 874 பேர் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 135 பேர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தமிழகத்தில் 874 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20246ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 874 பேர் பேர்களில் சென்னையை சேர்ந்தவர்கள் 618 என்பதும் சென்னையில் முதல்முறையாக 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.. இதனையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13362ஆக அதிகரித்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர் என்பதும் இதனையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 11313உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குணமாகியவர்களின் எண்ணிக்கை இன்றும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று தமிழகத்தில் இன்று 9 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால் தமிழகத்தின் மொத்த பலி எண்ணிக்கை 154ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தமிழகத்தில் இன்று 11,334 பேர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 4,66,550 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News

ஓடிடியில் திரைப்படம் வெளியிடுவதை அரசு தடுக்குமா? அமைச்சர் கடம்பூர் ராஜூ அதிரடி பதில் 

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தினால் திரைக்கு வர தயாராக இருக்கும் ஒரு சில திரைப்படங்கள் ஒடிடி பிளாட்பாரத்தில் வெளியாகி

டிக்கிலோனாவின் ஸ்டைலிஷ் 3வது லுக்: பெரும் வரவேற்பு

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் தொடர்ச்சியாக வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'டிக்கிலோனா'.

4 பேர் பயணம் செய்ய ஒரு விமானத்தையே வாடகைக்கு எடுத்த தொழிலதிபர்!!!

ஊரடங்கு நேரத்தில் இந்தியா முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முயற்சித்து பலர் தங்களது உயிரை இழந்து வருகின்றனர்.

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் யோகிபாபு

12 முறை தேசிய விருது பெற்ற பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கும் திரைப்படம் ஒன்றில் யோகி பாபு முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவுள்ளார்

சூர்யா-ஜோதிகா தவறாமல் பார்க்கும் பிரபல நடிகரின் திரைப்படங்கள்

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா, ஜோதிகா, ஒரு பிரபல நடிகரின் திரைப்படங்கள் அனைத்தையும் தவறாமல் பார்த்து விடுவோம் என்று கூறி உள்ளனர்