கொரோனாவில் இருந்து விடுபட்ட நூற்றுக்கு 90 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கு… பகீர் தகவல்!!!

  • IndiaGlitz, [Thursday,August 06 2020]

 

கடந்த டிசம்பர் மாத இறுதியில் முதன்முதலாக வுஹான் மாகணத்தின் இறைச்சி சந்தையில் இருந்து கொரோனா பரவியதாகக் கூறப்படுகிறது. நோய்த்தொற்று ஏற்பட்டு 7 மாதங்களை கடந்து விட்ட பின்பும் கட்டுப்பாட்டு நிலைக்கு கொண்டு வரப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கொரோனா உலகின் அனைத்து மூலை முடுக்குகளிலும் பரவி, உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தி, கொத்துக் கொத்தாக மனித உயிர்களை பலிவாங்கும் பெருந்தொற்றாகவும் இது மாறிவிட்டது. இதனால் மனித குலம் இப்பெருந்தொற்றில் இருந்து எப்போதுதான் வெளிவருமோ என்ற மலைப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

இத்தனை அதிர்ச்சியும் பத்தாது என்று தற்போது வுஹான் மாகாணத்தில் உள்ள ஜாங்னான் மருத்துவப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவலை வெளியிட்டு இருக்கின்றனர். அதில் கொரோனாவில் இருந்து மீண்ட 90 விழுக்காடு மக்களிடம் நுரையீரல் குறைபாடு இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் சராசரி வயது 59 என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனாவால் முதன் முதலாகப் பாதிக்கப்பட்ட வுஹான் நகரத்து மக்களை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் கடந்த ஜுலை மாதம் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடல் பரிசோதனையில் 90 விழுக்காடு கொரோனா பாதித்த மக்களுக்கு அவர்களின் நுரையீரல் மிகவும் பழுதடைந்து இருப்பதாகவும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கொரோனாவில் இருந்து மீண்டவர்களிடம் பெரும்பாலும் நுரையீரல் காற்றோட்டம், வாயு பரிமாற்ற செயல்பாடு போன்ற பாதிப்புகள் இருப்பதாகவும் அந்தப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது. மேலும் பெரும்பாலான கொரோனா பாதித்த மக்கள் இன்றைக்கும் ஆக்சிஜன் எந்திரங்களை நம்பியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதைத்தவிர பீஜிங் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் டோங்ஸிமென் மருத்துமனையைச் சார்ந்த மருத்துவர் டெங்லியாங் கொரோனாவில் இருந்து மீண்ட 65 வயதுக்குட்பட்ட 10 விழுக்காட்டு மக்களுக்கு உடலில் முற்றிலும் நோய் எதிர்ப்பு சக்தி மறைந்து இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

More News

லெபனான் போன்று சென்னைக்கும் ஆபத்தா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் பகீர் தகவல்!!!

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட வெடிவிபத்தால் இதுவரை 138 பேர் உயிரிழந்துள்ளனர்

காதில் இருந்த கம்மலை விற்று மகளுக்காக ஸ்மார்ட் போன் வாங்கிய தேவதாசிப்பெண்!!!

ஆந்திராவில் குழந்தைகளின் படிப்புக்காக தாலியைவிற்று டிவி வாங்கிய பெண்மணியைப் போல தற்போது கர்நாடகாவிலும் மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்று இதயத்தையும் பதம் பார்க்குமா??? ஆய்வு மையம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!!!

பொதுவாக கொரோனா பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நுரையீரல் மற்றும் சிறுநீரகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்து இருந்தனர்.

வழக்கு வந்தால் ஓடி ஒளிந்து கொள்வார் எஸ்.வி.சேகர்: முதலமைச்சர் பழனிசாமி

கடந்த இரண்டு நாட்களாக நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர், அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்வதும், அதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்து வருவதுமான

ரூ.350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கின்றாரா நிதின் சத்யா?

வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை-28' என்ற திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகர் நிதின் சத்யா அதன் பின்னர் 'சத்தம் போடாதே' 'சரோஜா' 'பந்தயம்' 'முத்திரை' உள்பட ஒருசில திரைப்படங்களில் நடித்தார்.