close
Choose your channels

நேற்றைவிட இன்று இருமடங்கான கொரோனா பாசிட்டிவ்: பீலா ராஜேஷ் தகவல்

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்து வரும் நிலையில் இன்று தமிழகத்தில் 96 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 96 பேரில் 84 பேர் டெல்லி மாநாடு சென்று வந்தவர்கள் என்பதும் இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று கொரோனாவால் 48 பேர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று இரு மடங்காக 96 பேர் பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை 59918 என்றும், கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 213 என்றும், இதுவரை 32896 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்திருப்பதாகவும், சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 27 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.