close
Choose your channels

தமிழகத்தில் இன்று மட்டும் 98 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு: 1173ஆக உயர்ந்தது

Monday, April 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்களை தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் இன்று கொரோனாவால் 98 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக காதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இதனையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக உயர்ந்துள்ளது.

இன்று பாதிக்கப்பட்ட 98 பேர்களில் 91 பேர் தனியார் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தவரகள் என்று சுகாதார செயலர் பீலா ராஜேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் 58 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாகவும், தமிழகத்தில் 12,746 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் வீட்டுக் கண்காணிப்பில் 33,850 பேர் உள்ளனர் என்றும் 28 நாட்கள் தனிமையை முடித்தவர்கள் 63,380 பேர்கள் என்றும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

மேலும் ரேபிட் டெஸ்ட் கருவிகள் 4 லட்சம் என்ற எண்ணிக்கையில் ஆர்டர் செய்துள்ளதாகவும் இந்த கருவிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு வந்துவிடும் என்றும் சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.