திருச்சி அருகே 9ஆம் வகுப்பு மாணவி எரித்து கொலை: ஜெயப்ரியாவை அடுத்து இன்னொரு கொடூரம்!

  • IndiaGlitz, [Tuesday,July 07 2020]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்ரியா, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த சம்பவம் நடந்து இரண்டு நாட்களில் தற்போது திருச்சி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக வெளி வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர்பாளையம் என்ற பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவரது மகள் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த அவர், இயற்கை உபாதையை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றதாக தெரிகிறது

தனது மகள் காட்டுப்பகுதிக்கு சென்று நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது தாய் காட்டுப்பகுதியில் தேடியபோது கருவேல முள் பகுதியில் அவரது உடல் எரிந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அந்த பகுதி மக்கள் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதுகுறித்த தகவல் அறிந்த சோமரசம்பேட்டை காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க முயற்சிகளுமே செய்யப்பட்டது

இந்த நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவி படுகொலை குறித்து விசாரணை செய்ய திருச்சி மாவட்ட எஸ்பி தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குற்றவாளி விரைவில் பிடிபடுவார்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இரண்டு நாட்களுக்கு முன் அறந்தாங்கி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து தமிழக மக்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

More News

ஒரே நாளில் உலக அளவில் இரண்டாவது இடம்: கொரோனா பாதிப்பில் இந்தியாவுக்கு அதிர்ச்சி

கடந்த சில வாரங்களுக்கு முன் உலகில் அதிகம் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளின் பட்டியலில் 10வது இடத்திற்கும் கீழே இருந்த இந்தியா, சமீபத்தில் 4வது இடத்திற்கு முன்னேறியது

50% சம்பளத்தை குறைத்த கோலிவுட்டின் முன்னணி நடிகை!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக படப்பிடிப்பு எதுவும் நடக்காததால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தயாரிப்பாளருக்கு உதவும் வகையில்

பீட்டர்பாலுடன் நெருக்கமாகிய மகள்கள்: அப்பா-மகள் உறவு குறித்து வனிதா பெருமிதம்!

நடிகை வனிதா மற்றும் பீட்டர்பால் திருமணம் சமீபத்தில் நடந்து பெரும் சர்ச்சையான நிலையில், சர்ச்சை குறித்து கவலைப்படாமல், அவ்வபோது பதிலடி கொடுத்து வரும் வனிதா, தனது

பாலியல் வன்கொடுமையால் பலியான சிறுமி ஜெயப்ரியா குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் உதவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி ஜெயப்பிரியா பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

இதுவொரு சைலண்ட் செல்பி: க்யூட் குழந்தையுடன் ஆல்யா மானசா

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா அந்த தொடரின் நாயகன் சஞ்சீவ் கார்த்திக்கை