close
Choose your channels

அண்டை மாநிலத்தில் 50 அடி உயர விஜய்யின் பிகில் கட் அவுட்!

Tuesday, October 22, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் வெளியாகும்போது தமிழகத்தில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் உள்ள ரசிகர்களும் பெரும் பரபரப்பு அடைந்து முதல் நாள் முதல் காட்சியை காண ஆர்வத்துடன் இருப்பார்கள் என்பது தெரிந்ததே.

குறிப்பாக விஜய்க்கு கேரளாவில் மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பதும் கேரளாவில் விஜய் படங்களின் வசூல் ஒவ்வொரு படத்திற்கும் சாதனை புரிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே நாளில் மகேஷ் பாபு, ராம்சரன் தேஜா, பவன் கல்யாண், அல்லு அர்ஜூன் போன்ற முன்னணி ஸ்டார்கள் இருந்தாலும் விஜய் படம் வெளியாகும்போதும் அங்குள்ள விஜய் ரசிகர்கள் படம் வெளியாகும் நாளை ஒரு திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்

இந்த நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படம் ’விசில் என்ற பெயரில் தெலுங்கு மாநிலங்களில், தமிழில் வெளியாகும் அதே அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படம் வெளியாவதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் விஜய் ரசிகர்கள் 50 அடி உயரத்தில் கட்-அவுட் ஒன்று வைத்துள்ளனர். இந்த கட் அவுட்டை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.