close
Choose your channels

செக் மோசடி வழக்கு: விஜய் நாயகிக்கு கைது வாரண்ட்

Sunday, October 13, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த ’புதிய கீதை’ படத்தின் நாயகியும் பாலிவுட் நடிகையுமான அமிஷா பட்டேல் மீது பதிவு செய்யப்பட்ட செக் மோசடி வழக்கில் தற்போது அவருக்கு எதிராக கைது வாரண்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நடிகை அமிஷா பட்டேலும் அவருடைய பார்ட்னரும் படம் தயாரிக்க அஜய்குமார் சிங் என்பவரிடம் ரூ.2.5 கோடி கடன் வாங்கியிருந்தனர். 2018ஆம் ஆண்டு படம் வெளியாகும் என்றும் அப்போது அந்த பணத்தை திருப்பி தருவதாகவும் அமிஷா கூறியிருந்தார்.

இந்த நிலையில் 2018ஆம் ஆண்டு அந்த படம் வெளிவராததால் கடன் கொடுத்த அஜய்குமார் சிங், அமிஷா பட்டேலிடம் பணம் கேட்டுள்ளார். இதற்காக அசலும் வட்டியும் சேர்த்து ரூ.3 கோடிக்கு அமிஷா பட்டேல் செக் கொடுத்துள்ளார். ஆனால் இந்த செக் பவுன்ஸ் ஆகி திரும்பிவிட்டது. இதுகுறித்து போன் நோட்டீஸ் மூலம் அஜய்குமார் சிங் கேட்டபோது, அமிஷாவிடம் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை.

இதனையடுத்து அமீஷா பட்டேல் மீது அஜய்குமார் சிங் செக் மோசடி வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், அமிஷா பட்டேலுக்கு கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.