விராத்-அனுஷ்காவுக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

  • IndiaGlitz, [Wednesday,February 21 2024]

கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா தம்பதிக்கு விலை மதிப்பில்லா பொக்கிஷம் கிடைத்துள்ளததை அடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகை அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு வாமிகா என்ற பெயரிட்ட நிலையில் சமீபத்தில் வாமிகாவின் மூன்றாவது பிறந்தநாள் விழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் விராட் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு தற்போது இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாகவும் தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு அகாய் என்ற பெயர் வைத்துள்ளதாகவும் சமூக வலைதளத்தில் இருவரும் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் மேலும் கூறிய போது ’மிகுந்த மகிழ்ச்சி மற்றும் அன்பினால் எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன. பிப்ரவரி 15ஆம் தேதி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை ரசிகர்களாகிய உங்களுக்கு அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

வாமிகாவின் குட்டி தம்பிக்கு அகாய் என்ற பெயர் இட்டுள்ளோம். இந்த அழகான நேரத்தில் எங்கள் வாழ்க்கையில் கிடைத்த பொக்கிஷத்திற்கு உங்கள் ஆசியையும் வாழ்த்துக்களையும் வேண்டுகிறோம்’ என்று கூறியுள்ளனர். இதனை அடுத்து விராத் கோலி - அனுஷ்கா தம்பதிக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை.. த்ரிஷாவை சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர் குறித்து விஷால்..

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜுவின் கருத்துக்கு பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் விஷாலும் தனது சமூக வலைத்தளத்தில் இது குறித்து

தனுஷின் 'ராயன்' படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமில்லை.. சொன்னது யார் தெரியுமா?

தனுஷின் 50வது திரைப்படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

த்ரிஷாவை பற்றி நான் அப்படி சொல்லவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த அரசியல்வாதி..!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகில் இருந்து கடும் எதிர்ப்பு

நடிகர் கவின் குறித்து பரவி வரும் வதந்தி.. சுந்தர் சி தரப்பு அளித்த விளக்கம்..!

சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் 'கலகலப்பு 3' திரைப்படத்தில் நடிகர் கவின் நடிப்பதாக சமூக வலைதளங்களில் வதந்தி ஒன்று பரவி வரும் நிலையில் இது குறித்து சுந்தர் சி தரப்பினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்திய விவகாரம்..ஆர்கே செல்வமணி அறிக்கை..!

கூவத்தூர் விவகாரத்தில் நடிகைகளை சம்பந்தப்படுத்தி பேசிய முன்னாள் அதிமுக பிரமுகருக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில் பெப்சி அமைப்பின் தலைவர் ஆர் கே செல்வமணி இது குறித்து கண்டனம்