close
Choose your channels

நடிகையின் புகைப்படத்தில் முதல்வரின் படத்தை மார்ஃபிங் செய்த பெண் கைது!

Saturday, May 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் உடையுடன் கூடிய மெட்காலா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிரியங்காவின் இந்த கோலம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே. நடிகர் யோகிபாபுவின் ஹேர்ஸ்டைல், வீரப்பனின் மீசை போன்றவைகளுடன் இந்த புகைப்படம் ஒப்பீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் முகத்தை, பிரியங்கா சோப்ராவின் முகத்தின் மீது மார்பிங் செய்து பாஜக மகளிர் அணி நிர்வாகி பிரியங்கா ஷர்மா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

இது தொடர்பாக கொடுக்கப்பட்ட போலீஸ் புகாரை அடுத்து நடவடிக்கை எடுத்த போலீசார், பாஜக பெண் நிர்வாகி பிரியங்கா ஷர்மாவை கைது செய்தனர். பிரதமர் மோடி உள்பட பல தலைவர்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வந்து கொண்டிருக்கும்போது மம்தா பானர்ஜியின் மார்பிங் புகைப்படத்திற்கு மட்டும் கைது நடவடிக்கை ஏன்? என்று பலர் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.