close
Choose your channels

நடிகர் சூர்யாவின் அலுவலகத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு தகவல்

Monday, September 28, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் சூர்யா கடந்த சில வருடங்களாக ஆக்கபூர்வமான சமூக கருத்துக்களை தெரிவித்து வருகிறார் என்பதும் இதனையடுத்து அவருக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களும் ஒரு சிலர் மட்டும் கண்டனமும் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் தெரிந்ததே

சமீபத்தில் கூட நீட் தேர்வு குறித்து அவர் வெளியிட்ட ஒரு அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாமரர்கள் முதல் நீதிமன்ற நீதிபதிகள் வரை அவருடைய அறிக்கை குறித்து விவாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சூர்யாவின் அலுவலகத்திற்கு திடீரென வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்

நடிகர் சூர்யா அலுவலகத்தை மாற்றியது கூட தெரியாமல் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் சூர்யாவின் பழைய அலுவலகமான ஆழ்வார்பேட்டை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாகவும், இதனையடுத்து அங்கு மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

நீட்தேர்வு உள்பட பல்வேறு சமூக கருத்துக்களை தைரியமாக கூறிவரும் சூர்யாவை பயமுறுத்துவதற்கா இந்த வெடிகுண்டு மிரட்டல்? என்பது விசாரணையின் முடிவில் தான் தெரிய வரும்
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.