close
Choose your channels

விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு: சென்னை நீதிமன்றத்தில் மனுதாக்கல்!

Sunday, December 5, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என சென்னை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் நடிகர் விஜய் சேதுபதியை மர்ம நபர் ஒருவர் தாக்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்ட மகாகாந்தி என்பவர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விஜய்சேதுபதி மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும் என்று கூறி மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ‘விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து அவருடைய சாதனைகளை பாராட்டு தெரிவிப்பதற்காக அவரை அணுகியதாகவும், ஆனால் விஜய் சேதுபதி தன்னை இழிவுபடுத்தி பேசியதோடு தன்னுடைய ஜாதியை பற்றி தவறாக பேசியதாகவும், அது மட்டுமின்றி தனது மேலாளர் ஜான்சன் மூலமாக தன்னை காதில் அறைந்ததாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தன்னுடைய செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், மறுநாள் ஊடகங்களில் விஜய் சேதுபதியை தான் தாக்கியதாக அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

எனவே விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறி உள்ளார். இந்த மனு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.