தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு கிளம்பு எதிர்ப்பு… உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரிக்குமா???

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

 

சமீபகாலமாக ஆன்லைன் சூதாட்டங்களினால் இளைஞர்கள் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளும் விவகாரம் தமிழகம் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா போன்ற சில மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் தமிழகத்திலும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. காரணம் கொரோனா ஊரடங்கு நேரத்தில் ஆன்லைனில் கேம் விளையாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து அது சூதாட்டமாக மாறும் எண்ணிக்கையும் உயர்ந்து இருக்கிறது.

தமிழகத்தில் கிரிக்கெட் சூதாட்டம் போன்ற பெரும்பாலான சூதாட்டங்களுக்கு தடைவிதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு மட்டும் இதுவரை அரசாங்கம் தடை விதிக்காமல் இருப்பதற்கு தற்போது கண்டனங்கள் எழும்பி இருக்கின்றன. இந்நிலையில் ஆன்லைனில் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க கோரும் கோரிக்கை ஒன்றை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் நீலமேகம் என்பவர் நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் சமர்ப்பித்து இருந்தார்.

இந்த கோரிக்கை குறித்து கருத்துத் தெரிவித்த நீதிபதிகள், முறையீட்டுக்கு பதிலாக மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிப்பதாகத் தெரிவித்து இருந்தனர். அதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி நாளை மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கசல் செய்யப்பட இருப்பதாக பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்குத் தடை விதிக்கப்படுமா என்பது குறித்து மக்களும் எதிர்ப்பார்க்கத் தொடங்கிவிட்டனர்.

More News

ட்ரம்பின் தேர்தல் பிரச்சாரத்தால் இவ்வளவு உயிரிழப்பா? ஒட்டுமொத்த அமெரிக்காவையே கலங்க வைக்கும் தகவல்!!!

அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு அமெரிக்காவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் அதிபர் தேலுக்கான தேர்தல் தேதி  நாளை என அறிவிக்கப்பட்டு இருந்தாலும்

நயன்தாராவின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு: ஹீரோ யார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் பெரும்பாலான படங்களில் நடித்து வந்தாலும் தனது தாய்மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது திரைப்படங்கள் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே

4 லட்சத்திற்கும் மேலான தமிழ் வார்த்தைகள்: மதன்கார்க்கியின் புதிய முயற்சி!

4 லட்சத்துக்கும் மேலான தமிழ் வார்த்தைகள் கொண்ட அகராதி செயலி ஒன்றை மதன் கார்க்கி தனது குழுவினருடன் இணைந்து செய்து முடித்துள்ளார்.

ஒரு முட்டை சோற்றுக்காக ஏற்பட்ட கத்திக்குத்து… பரபரப்பு சம்பவம்!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் எக்(ege) ப்ரைட் ரைஸ் ஆர்டர் செய்த ஒருவர் அந்த கடையின் உரிமையாளரை கத்தியால் குத்திய சம்பவம் கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பூ பாதையா? சிங்கப்பாதையா? மீண்டும் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்திய ரஜினி ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வருவதில் இருந்து பின்வாங்கி விட்டார் என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்