close
Choose your channels

ஏ.ஆர்.ரகுமானின் 'மறக்குமா நெஞ்சம்' நிகழ்ச்சி.. நம்பிக்கை மோசடி உள்பட  2 பிரிவுகளில் வழக்கு..!

Friday, September 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இசைப்புயல் ஏஆர் ரகுமான் நடத்திய ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நிகழ்ச்சி கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போது இந்த நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய பலர் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பினார்.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இது குறித்து மன்னிப்பு கேட்டார். அதுமட்டுமின்றி இந்த இசை நிகழ்ச்சியை நடத்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஏசிடிசி நிறுவனம் பணத்தை திருப்பி கொடுப்பதாகவும் அறிவித்தது என்பதும் இன்று முதல் பணம் திருப்பி கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படியும் ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக சம்பந்தப்பட்ட ஏசிடிசி நிறுவனம் மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நம்பிக்கை மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் கானத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.