எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு: கைது செய்யப்படுவாரா?

  • IndiaGlitz, [Thursday,August 13 2020]

நடிகரு பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நடிகர் எஸ்வி சேகர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் எஸ்வி சேகரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறும்போது ’நடிகர் எஸ்வி சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது போலும், அதனை விரைவில் அரசு நிறைவேற்றும்’ என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

More News

சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி!!! திடுக்கிட வைக்கும் பின்னணி!!!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு உலகத்திலேயே முதல்முறையாக ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி ஆகஸ்ட் 12 இல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்

167 வருட வரலாற்றில் இதுதான் முதல்முறை- திடுக்கிட வைக்கும் இந்திய ரயில்வே துறையின் அறிவிப்பு!!!

கொரோனா பரவல் தடுப்பு காரணமாக கடந்த மார்ச் 23 இரவு முதல் இந்தியாவில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது.

என் மனதில் தோன்றியதை டெலிபதியால் உணர்ந்தாரா விஜய்? தமிழ் நடிகர் ஆச்சரியம்

என் மனதில் தோன்றியதை டெலிபதி மூலம் உணர்ந்து தளபதி விஜய் செடி நட்டார் என்று தமிழ் நடிகர் ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

பிறந்த நாளில் ரசிகர்களிடம் 'சாரி' கேட்ட சாயிஷா!

தமிழ் சினிமாவின் நாயகிகளில் ஒருவரான சாயிஷா, பிரபல நடிகர்களான சூர்யா, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருந்தார்

எனக்கு குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்: மொட்டை ராஜேந்திரனின் நெகிழ்ச்சியான வீடியோ!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய மொட்டை ராஜேந்திரன் இதற்கு முன் ஸ்டண்ட் கலைஞராக இருந்து அதன்பின் பாலாவின் 'பிதாமகன்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார்