close
Choose your channels

எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப் பதிவு: கைது செய்யப்படுவாரா?

Thursday, August 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரு பாஜக பிரமுகருமான எஸ்வி சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சமீபத்தில் நடிகர் எஸ்வி சேகர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தேசியக் கொடியிலுள்ள காவி நிறம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சி பிரமுகர்களும் எஸ்வி சேகரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று பேட்டி அளித்த அமைச்சர் ஜெயக்குமார் இது குறித்து கூறும்போது ’நடிகர் எஸ்வி சேகருக்கு சிறைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கிறது போலும், அதனை விரைவில் அரசு நிறைவேற்றும்’ என்று கூறியிருந்தார்

இந்த நிலையில் தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்வி சேகர் மீது போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.