லடாக்கில் சீன ராணுவம் திடீர் தாக்குதல்: 3 இந்திய ராணுவத்தினர் வீரமரணம்

கடந்த சில வாரங்களாகவே இந்திய-சீன எல்லையில் போர்ப்பதற்றம் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்திய எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டு வருவதும், பதிலடியாக இந்திய ராணுவமும் எல்லையில் தனது ராணுவத்தை குவித்ததும் மீண்டும் ஒரு இந்திய-சீனப்போர் வருமோ என்ற அளவில் பதட்டம் அதிகரித்தது

கொரோனா வைரஸ்க்கு சீனா தான் காரணம் என உலக நாடுகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டை திசை திருப்பவே சீனா, இந்திய எல்லையில் படைகளை குவித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்தியாவுக்கு அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒரே நேரத்தில் ஆதரவு கொடுத்ததால் சீன ராணுவம் சமீபத்தில் பின்வாங்கியதாகவும் செய்திகள் வெளியனாது

இந்த நிலையில் நேற்று இரவு லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகள் திடீரென தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் மூவர் உயிரிழந்ததாகவும், சீன தரப்பில் உயிரிழப்பு குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்திய தரப்பில் உயிரிழந்தவர்களில் ஒருவர் ராணுவ அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா மற்றும் சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பதட்டத்தை தணிக்க இரு நாட்டு அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்திய எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

லடாக் எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை செய்து வருவதாகவும், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், முப்படைகளின் தளபதிகளுடன் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

More News

தந்தைக்கு முடிவெட்டி காசு வாங்கி கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பதட்டம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது முறையாக ஒத்தி வைக்கப்பட்ட ஆஸ்கர் விருது: புதிய தேதி அறிவிப்பு

உலக அளவில் திரையுலகினர்கள் பெருமையாக கருதும் ஆஸ்கர் விருது கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுஷாந்த்சிங் இறுதி சடங்கின்போது சோகத்தில் உயிரிழந்த சகோதரர் மனைவி: அதிர்ச்சி தகவல்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தான் தங்கியிருந்த வீட்டில் மன அழுத்தம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மண்ணை மிதித்தவனை கைவிடாது சென்னை: பிரபல நடிகரின் அசத்தல் டுவிட்

தமிழகத்தின் பல ஊர்களில் இருந்து மட்டுமின்றி இந்தியாவின் பல நகரங்களில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வந்தவர்களின் எண்ணிக்கை ஏராளம்

டிக்டாக் காதலி, இன்ஸ்டாகிராம் காதலன், பேஸ்புக் நண்பர்: 18 வயது காதலர்களால் பரபரப்பு

டிக் டாக்கில் பிரபலமான 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாகிராமில் பழக்கமான ஒரு இளைஞருடன் காதல் கொண்டதாகவும்