கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டவர் மீது புகார்: பரபரப்பு தகவல் 

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

நித்தியானந்தாவின் கைலாச நாட்டில் ஓட்டல் வைக்க அனுமதி கேட்டு கடிதம் எழுதிய மதுரை ஹோட்டல் அதிபர் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அந்த நாட்டுக்கு எனத் தனிக் கொடி, தனி பாஸ்போர்ட் ஆகியவற்றை உருவாகியுள்ளதாகவும் அறிவித்திருந்தார். மேலும் கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று கைலாச நாட்டின் கரன்சியையும் அவர் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் கைலாச நாட்டில் ஓட்டல் தொடங்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மதுரையை சேர்ந்த ஓட்டல் நிறுவனர் குமார் என்பவர் நித்தியானந்தாவிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். நித்தியானந்தாவின் முகவரி தெரியாது என்பதால் இதை ஊடகங்கள் மூலம் அனுப்புவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஓட்டல் அதிபர் குமாரின் கடிதத்திற்கு சமீபத்தில் நித்தியானந்தாவும் பதிலளித்தார். கைலாச நாட்டில் ஓட்டல் நடத்த உங்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் விரைவில் எங்கள் நாட்டின் அதிகாரிகள் உங்களை தொடர்புகொண்டு பேசுவார்கள் என்றும் நித்தியானந்தா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளிக்கு கடிதம் எழுதிய ஓட்டல் அதிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் மீது மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

பிறந்த நாளில் வித்தியாசமான பரிசு கொடுத்த பிரபல நடிகர்: ஆச்சரியத்தில் சிரஞ்சீவி

பிரபல தெலுங்கு நடிகர் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் அவருக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்

ஓடிடியில் கீர்த்திசுரேஷின் அடுத்த படம்: எத்தனை கோடிக்கு விலை போனது?

திரைப்பட படப்பிடிப்புக்கு மத்திய அரசு நேற்று அனுமதி அளித்துவிட்ட போதிலும் திரையரங்குகளை திறப்பது குறித்து இன்னும் மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.

தனுஷால் இந்தி பட வாய்ப்பை மறுத்த 'ராட்சசன்' இயக்குனர்!

விஷ்ணு விஷால், அமலாபால் நடிப்பில் ராம்குமார் இயக்கிய 'ராட்சசன்' திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி

ஒரே நேரத்தில் 6 இடங்களில் கடல் நீரை உறிஞ்சும் மேகம்!!! ஹாலிவுட்டையும் மிஞ்சும் அற்புதக்காட்சி!!!

ஒரே நேரத்தில் அருகருகே 6 இடங்களில் மேகம் கடல் நீரை நேரடியாக உறிஞ்சுவதைப் போன்ற ஒரு புகைப்படத்தை தினத்தந்தி வெளியிட்டு இருக்கிறது.

மலை மீது ஒரு கிமீ பயணம் செய்யும் மாணவ மாணவிகள்! ஆன்லைன் வகுப்பின் பரிதாபங்கள்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன என்பது தெரிந்ததே. இந்த ஆன்லைன் வகுப்புகளை கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் இருப்பவர்கள்