close
Choose your channels

விக்னேஷ் சிவன் - நயன்தாரா மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்: புகார் கொடுத்தவர் யார் தெரியுமா?

Saturday, October 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி திருமணம் நடந்த நிலையில் சரியாக நான்கே மாதத்தில் தாங்கள் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகி விட்டதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்திய சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு அவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதிகள் மீது வழக்கறிஞர் சங்க தலைவர் என்பவர் சார்லஸ் அலெக்சாண்டர் என்பவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்து குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற நிலையில்தான் செயற்கை கருத்தரிப்பு முறையை கடைபிடிக்க முடியும் என்றும் ஆனால் திருமணமான நான்கே மாதங்களில் இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா தெரிவித்திருப்பது சட்டத்தை மீறிய செயல் என்றும் இது சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் நோக்கில் உள்ளதால் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.